அமெரிக்கா - இஸ்ரேல் உடனான போர் முடிவு! நிலைப்பாட்டை அறிவித்த ஈரான் ஜனாதிபதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு முடிவும் "ஈரானிய மக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் உறுதி செய்ய வேண்டும்" என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான் கூறியுள்ளார்.
"போரின் போது இராணுவம் காட்டிய எதிர்ப்பும், ஈரானிய மக்கள் வெளிப்படுத்திய தேசிய ஒற்றுமையும், நாடு தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைகளைக் கடந்துவர உதவிய மிக முக்கியமான காரணிகளில் அடங்கும்," என்றும்அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தின் போது பெஷெஷ்கியன் கூறியுள்ளார்.
அரசு செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி வெளியாகிய செய்தியில், ஈரானின் நிலைப்பாடுகளை வலுப்படுத்துவதில், பல்வேறு நகரங்களில் நடைபெறும் அரசு ஆதரவு ஆர்ப்பாட்டங்களின் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
ஈரான் சுதந்திரப் போராட்டம்
மாலை நேரங்களில் மக்கள் கூடுவது பெரும் மதிப்பு வாய்ந்தது என்றும், ஈரான் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

பெப்ரவரி 28 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராகத் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து பிராந்திய பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்தத் தாக்குதலில், அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட இதுவரை 1,340-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான், இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் மற்றும் அமெரிக்க இராணுவ சொத்துக்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்துள்ளது.
இதனால் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டதோடு, உலகளாவிய சந்தைகளும் விமானப் போக்குவரத்தும் சீர்குலைந்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 23 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்