அமெரிக்கா சிவப்பு கோடுகளை தாண்டினால் ஏற்படப்போகும் பேரழிவு : ஈரான் புரட்சிகர படை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
அமெரிக்க இராணுவம் "சிவப்புக் கோடுகளைத் தாண்டினால், எங்களின் பதிலடி பிராந்தியத்தையும் தாண்டிச் செல்லும்" என்றும், அது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, பல ஆண்டுகளுக்குப் பிராந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைச் சீர்குலைக்கும் என்றும் ஈரானின் புரட்சிகர காவல்படை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கு எதிரான தனது பதிலடி நடவடிக்கைகளில், இதுவரை "குறிப்பிடத்தக்க அளவு நிதானத்தைக்" கடைப்பிடித்து, இலக்குகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி. கூறியுள்ளது.
நிதானத்தை கடைப்பிடிக்கமாட்டோம்
இருப்பினும், அத்தகைய நிதானம் இனி தொடராமல் போகலாம் என்றும் ஐ.ஆர்.ஜி.சி. எச்சரித்துள்ளது."இனிமேல், அத்தகைய அனைத்துக் கருத்தாய்வுகளும் ஒதுக்கி வைக்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவம் "சிவப்புக் கோடுகளை" மீறினால், ஈரானின் பதிலடி "பிராந்தியத்தைத் தாண்டியும் செல்லும்" என்றும், அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படலாம் என்றும் ஐ.ஆர்.ஜி.சி. மேலும் எச்சரித்துள்ளது.
எண்ணெய், எரிவாயு விநியோகம் சீர்குலைக்கப்படும்
மேலும், ஈரான் பல ஆண்டுகளாக பிராந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை சீர்குலைக்கக்கூடும் என்றும், பதட்டங்கள் மேலும் அதிகரித்தால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்படக்கூடிய ஸ்திரத்தன்மையின்மை குறித்த கவலைகள் எழுந்துள்ளதாகவும் அது எச்சரித்துள்ளது.

ஈரானில் உச்சக்கட்ட படபடப்பு...! அணுமின் நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி - எட்டு மணி வரை ட்ரம்பின் கெடு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |