செவ்வந்தியிடமிருந்த இந்திய அடையாள அட்டை! யாருமறியா திடுக்கிடும் தகவல்கள்

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Oct 17, 2025 03:28 AM GMT
Report

நேபாளத்தில் இடம்பெற்ற இஷார செவ்வந்தியின் கைது தொடர்பில் மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், செவ்வந்தி கைது செய்யப்பட்ட போது, தமிழினி என்ற போலி பெயருடன் அவர் வீடொன்றில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

குறித்த பெயருடன் கூடிய இந்திய அடையாள அட்டையை ஜே.கே பாய் தயார் செய்து கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றவரா செவ்வந்தி: அதிர வைக்கும் உண்மைகள்

புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றவரா செவ்வந்தி: அதிர வைக்கும் உண்மைகள்


ஒலுகலவின் நகர்வு

இது குறித்து மேலும் தெரியவருகையில், ஒக்டோபர் 10 ஆம் திகதி சம்பந்தப்பட்ட நடவடிக்கைக்காக உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகலவும், கிஹான் சில்வா என்ற காவல் அதிகாரியும் நேபாளத்திற்குச் சென்றிருந்தனர்.

செவ்வந்தியிடமிருந்த இந்திய அடையாள அட்டை! யாருமறியா திடுக்கிடும் தகவல்கள் | Ishara Went To Nepal Under The Name Tamilini

அங்கு அவர்களுக்கு நேபாளத்திற்கான பிரதித் தூதுவர் சமீரா முனசிங்கவும், அவரது கணவரும் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து, அந்த நாட்டு காவல்துறையினரையும் தொடர்பு படுத்தி வைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்நாட்டு காவல்துறையினர் வேறொரு தரப்பினர் மூலம் ஜே.கே. பாயைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் அவரிடம் ரோஹன் ஒலுகல இஷாராவைப் பற்றி கேட்டபோது, ​​தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்துள்ளார்.

எனினும், காவல்துறையினர் இஷாராவின் தொலைபேசி எண்ணை அவரிடமிருந்து கண்டுபிடித்து, மேற்கொண்ட விசாரணையில் இஷாராவின் இருப்பிடம் கண்டுடறியப்பட்டுள்ளது.

இஷாராவின் கைது

பின்னர், நேபாள காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை விசாரித்தபோது, ​​இந்தியாவின் பெங்களூரிலிருந்து வந்த தமிழனி என்ற பெண், இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

செவ்வந்தியிடமிருந்த இந்திய அடையாள அட்டை! யாருமறியா திடுக்கிடும் தகவல்கள் | Ishara Went To Nepal Under The Name Tamilini

இதற்காக தமிழினி என்ற பெண் மாதத்திற்கு 6,000 நேபாள ரூபாய் செலுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தமிழனி என்ற பெயரில் தங்கியிருக்கும் நபர் இஷாரா செவ்வந்தி என்பது தெரியவந்துள்ளது.

அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பிறகு, ஒலுகலவும் நேபாள காவல்துறையினருடன் தொடர்புடைய இடத்திற்குச் சென்ற மற்றொரு அதிகாரியும் கீழ் தளத்தில் தங்கி, மற்றைய அதிகாரிகளை மேல் தளத்திற்கு அனுப்பி இஷாராவைக் கைது செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, நேபாள காவல்துறையினர் இஷாரா கைது செய்தபோது, ​​அவள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது, பின்னர் ஒலுகல சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்றுள்ளார்.

சாவகச்சேரியில் அர்ச்சுனா எம்பிக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு!

சாவகச்சேரியில் அர்ச்சுனா எம்பிக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு!


இந்திய அடையாள அட்டை

பின்னர், இஷாராவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு, மதுகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் ஒரு மாதம் ஒளிந்து கொண்டிருந்தாக தெரிவித்துள்ளார்.

செவ்வந்தியிடமிருந்த இந்திய அடையாள அட்டை! யாருமறியா திடுக்கிடும் தகவல்கள் | Ishara Went To Nepal Under The Name Tamilini

அதனைதொடர்ந்து, பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில், மித்தேனியா பகுதிக்குச் சென்று சுமார் ஒரு மாதம் அங்கேயே தங்கிய நிலையில், பெக்கோ சமன் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அங்கு செய்து கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், யாழ்ப்பாணம் சென்று, மூன்று நாட்கள் தங்கி, ஜே.கே. பாயுடன் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பி சென்றுள்ளார்.

குறித்த பயணத்திற்கு சுமார் ஐந்து மணி நேரம் எடுத்ததாகவும், ஒரு பெரிய படகில் சிறிது தூரம் சென்று, பின்னர் ஒரு சிறிய படகில் இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும் இஷாரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கிய பிறகு, ஜே.கே பாய் தமிழனி என்ற பெயரில் ஒரு இந்திய அடையாள அட்டையை தனக்கு வழங்கி பின்னர் நேபாளம் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஷாராவை விட ஆபத்தான ஜே.கே பாய்! நேபாள கைதுக்கு உதவிய இந்திய புலனாய்வு

இஷாராவை விட ஆபத்தான ஜே.கே பாய்! நேபாள கைதுக்கு உதவிய இந்திய புலனாய்வு

சரத் பொன்சேகாவின் பதவி.! அரசாங்கம் வெளியிட்ட தகவல்

சரத் பொன்சேகாவின் பதவி.! அரசாங்கம் வெளியிட்ட தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்