நாடளாவிய ரீதியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்கள்

Jaffna Trincomalee Independence Day Sri Lanka
By Independent Writer Feb 04, 2026 07:39 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

"இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் இலங்கையின் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (04) காலை ஆரம்பமாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலுமுள்ள மாவட்ட செயலகங்கள், அரச அலுவலகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் சுதந்திர தினம் கொண்டாடடப்பட்டது.

சுதந்திர தின கரிநாள் பேரணியில் பதற்றம்! இடைமறித்த அதிரடிப்படை

சுதந்திர தின கரிநாள் பேரணியில் பதற்றம்! இடைமறித்த அதிரடிப்படை

யாழ்ப்பாணம்

அந்தவகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்று (04) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி - தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபரின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது.

அத்துடன் இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்கள் | Island Wide Srilanka Independence Day Celebrations

செய்திகள் - த.பிரதீபன்

மட்டக்களப்பில் போராட்டம் : அம்பாறையில் இருந்து வந்தவர்களை அச்சுறுத்திய காவல்துறை

மட்டக்களப்பில் போராட்டம் : அம்பாறையில் இருந்து வந்தவர்களை அச்சுறுத்திய காவல்துறை

வவுனியா 

இலங்கையின் 78வது சுதந்திரதினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையாக இடம்பெற்றது.

வவுனியா பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி.எ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மதகுருமார் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது தமிழ் சிங்களம் என இரு மொழிகளிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டு சுதந்திரந்திர தினம் எளிமையாக கொண்டாடப்பட்டது.

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்கள் | Island Wide Srilanka Independence Day Celebrations

ஜனாதிபதி தலைமையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் தேசிய சுதந்திர தின நிகழ்வு

செய்திகள் - கபில்

மன்னார்

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரினால் சுதந்திர தின உரை நிகழ்த்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் உதவி மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - நயன்

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்கள் | Island Wide Srilanka Independence Day Celebrations

திருகோணமலை

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, கிழக்கு மாகாண சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று (04) திருகோணமலை கடற்கரையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றன.

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2026) பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்றது.

கொட்டும் மழையிலும் 78 ஆவது தேசிய சுதந்திர தேசியக்கொடி பிரதேச செயலாளரால் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்கள் | Island Wide Srilanka Independence Day Celebrations

அத்துடன் 78வது சுதந்திரதின நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூரில் இடம்பெற்றது போது தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள் மத்ரஸாவிலிருந்து தேசிய கொடியை அசைத்தவாறு தோப்பூர் முட்சந்திவரை பேரணியாக வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் -  றொசான், எம்.என்.எம்.புஹாரி

கிளிநொச்சி

வடமாகாண மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் 78வது சுதந்திர தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிலையில் தமிழ், சிங்கள, ஸ்லாமிய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழந்தைகளால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

குறித்த நிகழ்வில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய மக்கள், சர்வமதத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்கள் | Island Wide Srilanka Independence Day Celebrations

செய்திகள் - காண்டீபன்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025