குறைந்துவரும் ஈரானின் ஏவுகணைகள் - இஸ்ரேலின் மீளுயர்வு: மத்திய கிழக்கின் புதிய அதிகாரப் போட்டி
கடந்த சில நாட்களில் மட்டும் ஈரானின் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை (Missile Launchers) இஸ்ரேலியப் படைகள் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
அத்தோடு, போர் உச்சத்தில் இருந்தபோதிலும், இஸ்ரேல் தனது வான்வழிப் பாதைகளைத் திறந்து, விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
இது இஸ்ரேல் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதையும், ஈரானின் அச்சுறுத்தல்களைத் தற்காப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டதையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் உள்ளிட்ட உயர்மட்டக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் ஏவுகணைத் தாக்குதல்களின் வீரியம் கணிசமாகக் குறைந்துள்ளதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
இவ்வாறு ஈரானின் பலவீனம் மற்றும் இஸ்ரேலின் ஆதிக்கம் மத்திய கிழக்கின் அதிகாரப் போட்டியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேலின் தற்போதைய உண்மையான நிலவரம் என்ன என்பது குறித்துக் களத்திலிருந்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |