'தெஹ்ரான் அதிரும்' மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்
புதிய இணைப்பு
ஈரானின் போர்நிறுத்த மீறலுக்கு பிறகு இஸ்ரேல் நிதியமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரவை உறுப்பினருமான பெசலேல் ஸ்மோட்ரிச்ச் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் கடுமையான எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதில் அவர், “ தெஹ்ரான் அதிரும்” என தெரிவித்துள்ளார்.
Bezalel Smotrich, following rocket sirens in Israel: "Tehran will tremble" pic.twitter.com/zag0340vqn
— B.M. (@ireallyhateyou) June 24, 2025
முதலாம் இணைப்பு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே இருதரப்பு போர்நிறுத்தம் உறுதி செய்யப்பட்ட பின்னர், இஸ்ரேல் நிதியமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரவை உறுப்பினருமான பெசலேல் ஸ்மோட்ரிச்ச், இஸ்ரேல் ஒரு “மகத்தான வெற்றியை” பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், “நாம் ஒரு உடனடி உயிர்வழி அச்சத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளோம். தெஹ்ரானில் உள்ள பல்லாயிரக்கணக்கான இலக்குகளை அழித்துள்ளோம்.
பணயக்கைதிகளை மீட்க நடவடிக்கை
இப்போது, முழுத் தியாகத்துடன் நாம் திரும்பிச் செல்கின்ற இடம் காசா.
அங்கு ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க, நம் பழைய கைதிகளை மீட்டுத் திருப்பி எடுக்க, மேலும் நீண்டகால நலத்தையும் பாதுகாப்பையும் இஸ்டீரேல் மக்களுக்கு உறுதி செய்யவேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரெல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகூட் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ டான் இல்லோவ்ஸ், இஸ்ரெயேல் ஈரான்மீது தாக்குதல்களை நிறுத்த வேண்டுமா என்பது குறித்து சமூக ஊடகங்களில் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
