இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : எண்ணெய் உற்பத்தியை பாதியாக குறைத்தது ஈரான்
ஈரானின் முக்கிய இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.இதில் இராணுவ இலக்குகள் என்றில்லாமல் பொருளாதார இலக்குகளும் குறி வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஈரானின் புஷேர் மாகாணம், கங்கனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
பாதியாக குறைவடைந்த எண்ணெய் உற்பத்தி
இதனால் ஈரான் எண்ணெய் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளது. நாளொன்றுக்கு 15 முதல் 20 லட்சம் பரல்கள் கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து ஏற்றுமதியாகிறது.
தற்போது நடந்து வரும் மோதலால் இந்த ஏற்றுமதி பாதிக்கப்படும். இதை ஈடு செய்ய ஒபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
அதிகரிக்குமா கச்சாய் எண்ணெய் விலை..!
அதில் பிரச்னை ஏற்பட்டால் தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 73 டொலராக இருப்பது 90 டொலர் வரை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இவ்வாறு உயர்ந்தால், உலகெங்கும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
