ட்ரம்ப்பை சந்திக்கவுள்ள நிலையில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: குழந்தைகள் உட்பட 32 பேர் பலி
மத்தியக்கிழக்கு காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
அந்தவகையில், காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்
இந்தத் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் என 32 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை இஸ்ரேல் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கடந்த 18ஆம் திகதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
