பழிக்கு பழி : ஈரானின் மூன்று உலங்கு வானூர்திகளை தாக்கி அழித்தது இஸ்ரேல்
சற்று நேரத்திற்கு முன்பு ஈரானின் கெர்மன்ஷாவில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் மூன்று ஈரானிய AH-1 உலங்கு வானூர்திகளை இஸ்ரேலிய விமானப்படை குண்டுவீசி தாக்கி அழித்ததாக ஐடிஎஃப் தெரிவித்துள்ளது.
“இந்த உலங்கு வானூர்திகள் ஈரானிய வான்வெளியில் இயங்கும் விமானப்படை விமானங்களை குறிவைக்கும் நோக்கம் கொண்டவை” என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.
முன்னதாக, கெர்மன்ஷாவில் உள்ள ஒரு தளத்தில் மேலும் ஐந்து ஈரானிய உலங்கு வானூர்திகளை அழித்ததாக ஐடிஎஃப் கூறியது.
The Israeli Air Force bombed another three Iranian AH-1 helicopters at a military base in Kermanshah a short while ago, the IDF says.
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) June 18, 2025
"These helicopters are intended to target air force aircraft operating in Iranian airspace," the military says.
Earlier, the IDF says it… pic.twitter.com/SLE7WCjo0z
(முதலாம் இணைப்பு)
தொடரும் ஈரானின் பதிலடி :சுட்டு வீழ்த்தப்பட்டது இஸ்ரேலிய ஆளில்லா விமானம்
இஸ்ரேலிய(israel) பாதுகாப்புப் படைகள் தங்கள் ஆளில்லா விமானங்களில் ஒன்று ஈரானில் (iran)சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.
"ஒரு செயல்பாட்டு நடவடிக்கையின் போது, விமானப்படையால் தொலைதூரத்தில் இயக்கப்படும் ஆளில்லா விமானத்தின் மீது தரையிலிருந்து வான் ஏவுகணைகள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஒப்புக்கொண்டது இஸ்ரேல்
"ஈரானிய வான்வெளியில் சாதனம் விழுந்தது, உயிரிழப்புகள் எதுவும் இல்லை, தகவல் கசிவு ஏற்படும் என்ற பயமும் இல்லை," என்று ஐ.டி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை மத்திய இஸ்பஹான் மாகாணத்தில் ஈரான் வான் பாதுகாப்புப் படைகள் ஒரு மேம்பட்ட ஹெர்ம்ஸ் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சியில் இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
