சாகர காரியவசத்திற்கு பிணை : வெளிநாட்டு பயணத்தடை
புதிய இணைப்பு
குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசத்தை பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச உத்தரவிட்டார்.
இதன்போது, தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், வெளிநாட்டுப் பயணத் தடையுடனும் சாகர காரியவசத்தைப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
மூன்றாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசம், இன்று (10) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது செய்யப்பட்டு, தற்போது கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்.
இரண்டாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை மா அதிபர் (IGP) குறித்து அவர் அளித்த அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அவர் வந்தபோது கைது இடம்பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகியுள்ளார்.

காவல்துறை மா அதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, இன்று காலை 10.30 மணிக்கு குறித்த பணியகத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, காவல்துறை மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.
டச்சு மண்ணை அதிர வைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |