அஸ்வெசும கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சித் தகவல்

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples Money Sri Lankan Schools
By Sathangani Dec 03, 2024 08:03 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

புதிய இணைப்பு

நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் பயனடையும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் மாதாந்த கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயத்தினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இன்று (03) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அதன்படி, எட்டு இலட்சம் பேருக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த 8,500 ரூபா நிவாரணக் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை

அத்துடன் மிகவும் வறிய நிலையில் உள்ள நான்கு இலட்சம் மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்த 15,000 ரூபா கொடுப்பனவு 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சித் தகவல் | Issue Aswesuma Allowance For Low Income Families

மேலும் எட்டு இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் 2025 மார்ச் 31 வரையிலும், மற்றொரு குழுக்களுக்கான கொடுப்பனவு 2024 டிசம்பர் 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

அடுத்த பாடசாலை தவணையில் இருந்து இந்த முடிவு நடைமுறைக்கு வரும் எனவும் பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று (02) அனுமதி கிடைத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முதலாம் இணைப்பு 

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவு தொடர்பாக முன்னாள் அரசாங்கம் கடைப்பிடித்த வினைத்திறன் இல்லாத நடைமுறையையே தற்போதைய அரசாங்கமும் கடைப்பிடித்து வருவதாகக் கிராம சேவகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக அந்தச் சங்கத்தினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அஸ்வெசும கொடுப்பனவுக்கான பயனாளிகள் தெரிவின்போது, பிழையில்லாத பொறிமுறை ஒன்றைப் பின்பற்றுமாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட தமிழர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண்

சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட தமிழர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண்

விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்

அஸ்வெசும கொடுப்பனவு சம்பந்தமான செயற்பாடுகளிலிருந்து கடந்த மே மாதம் 7ம் திகதிக்குப் பின்னர் கிராம சேவகர்கள் விலகிக் கொண்ட நிலையில்  அந்தப் பணிகள் தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஸ்வெசும கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சித் தகவல் | Issue Aswesuma Allowance For Low Income Families

இதேவேளை, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் பெருமளவான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புலம்பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு

புலம்பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு

பிரதேச செயலகத்திற்கு முன் குவிந்த மக்கள்

மேலும், அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைப் பதிவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைக் கையளிப்பதற்கும், நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அதிகளவான மக்கள் நுவரெலியா (Nuwaraeliya) பிரதேச சபை செயலகத்திற்கு முன்பாக கூடியிருந்தனர். 

அஸ்வெசும கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சித் தகவல் | Issue Aswesuma Allowance For Low Income Families

இதனிடையே, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கிடைக்கப் பெறாத குடும்பங்கள் அல்லது தனிநபர் தங்களது குறைகளை அறிவிப்பதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேங்காய் விலை அதிகரிப்புக்கு தீர்வு : வெளியான அறிவிப்பு

தேங்காய் விலை அதிகரிப்புக்கு தீர்வு : வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி