யாழ் மாநகர சபையில் காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழரசின் எதிர்காலம் NPP - EPDP யின் முடிவில்
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் நேற்றைய தினம் முக்கியமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கும் நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையில் (Jaffna Municipal Council ) மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு யார் தெரிவாவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் தேசிய பேரவையிடம் 12 ஆசனங்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிடம் 4 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான 16 ஆசனங்கள் கைவசம் இருக்கின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் 13 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் யாராவது ஆதரவு வழங்கினால் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
இந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவு வழங்கத் தயார் என அறிவித்திருந்த நிலையில் தமிழரசுக்கட்சியினர் அந்தக் கட்சியுடன் உத்தியோகப்பற்றற்ற பேச்சுக்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் தமிழ் தேசிய கட்சி ஒன்று யாழ் மாநகர சபையில்ஆட்சி அமைப்பது தென்னிலங்கை அரசுக்கு ஆபத்தாக அமையும் தேசிய மக்கள் சக்தி நினைக்கின்ற சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளது.
தென்னிலங்கை அரசை அனுசரித்து போகின்ற தமிழரசுக்கட்சி போன்ற தரப்புக்கள யாழ் மாநகர சபையில் மேயர் பதவியில் இருப்பது தென்னிலங்கை அரசுக்கு சாதகமானதாக அமையும்.
இந்த நிலையில் வாக்கெடுப்பு ஒன்று நடக்குமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியானது தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
அத்துடன் கொழும்பு மாநகர சபையை போன்று யாழ் மாநகர சபையையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நோக்குகின்றது.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காண்க....

செம்மணிப் புதைகுழியில் சிறுமி - பெண்களின் எலும்புக்கூடுகள் - அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
