வெறும் வாய்ச் சவடால்கள் - ரெலோவுக்குச் சுமந்திரன் பதிலடி
ரெலோவுக்குப் பதில் கொடுக்கும் விதத்தில் நாம் வெறும் வாய்ச் சவடால்கள் விடவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இதனை எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் வெறும் வாய்ச் சவடால்கள் விடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே நீங்களும் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டின்படி ஒழுக வேண்டும் என்றே கேட்கின்றோம்.
பொய்யாக கொள்கைக் கூட்டு
அதை விடுத்து, எம்மை வீழ்த்துவதற்காகப் பொய்யாக கொள்கைக் கூட்டு என்று சொல்லி உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்ததாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
இணங்கியபடி நடந்து கொண்டால் விட்டுக் கொடுப்புக்களுக்கு இப்போதும் இடமுண்டு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆணவத்தை விடுத்து அரவணைப்பே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நெறிப்படுத்தும் தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் கோட்டை விடுகிறது தமிழரசுக் கட்சி (ITAK) என செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
