இலங்கை தமிழ் அரசுக்கட்சி எடுத்துள்ள முக்கிய முடிவு
அதிபர் தேர்தல் அறிவிக்கப்படும் வரை பொது வேட்பாளர் உட்பட எந்த முடிவையும் எடுக்க கூடாது என இலங்கை தமிழ் அரசுக்கட்சி (Ilankai Tamil Arashu Katchchi )தீர்மானித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய அதன் மத்திய குழு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையை பார்த்து
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களால் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய கொள்கைகளைப் பார்க்கும். அவர்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பார்த்து முடிவு எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு
இதேவேளை அதிபர் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தும் யோசனையை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Democratic Tamil National Alliance )(DTNA) என்ற தமிழ் கட்சிகளின் மற்றுமொரு கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-md.webp)