பிரதமரின் தோழி உட்பட மூவர் துப்பாக்கிசூட்டில் பலி - இத்தாலியில் பயங்கரம்
இத்தாலியில் விடுதி ஒன்றில் குடியிருப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றவேளை இனந்தெரியாத ஆயுததாரி திடீரென மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் பிரதமரின் தோழி உட்பட 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் சங்கக் கூட்டம், அங்குள்ள விடுதியில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
திடீரென நுழைந்த இனந்தெரியாத நபர்
இந்த கூட்டத்தில் எதிர்பாராத விதமாக திடீரென நுழைந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
பிரதமரின் தோழி
குடியிருப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி சூட்டில் இறந்துபோன பெண்களில் நிகோலெட்டா என்பவர் தனது தோழி என்றும், அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி கூறியுள்ளார்.
