யாழில் சரமாரியான வாள்வெட்டு -தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
arrest
police
jaffna
sword
By Sumithiran
யாழில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாக இருந்த இளைஞன் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
"கோப்பாய், யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேக நபர் 6 மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார்.
காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறையினர் கூறினர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முற்படுத்தபட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்