நூலகத்துடனான பேருந்து நிழற்குடை யாழில் திறந்து வைப்பு
சுன்னாகம் றோட்டறக்ட் கழகத்தினரால் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்பெறக்கூடிய வகையிலான பேருந்து நிழற்குடை ஒன்று தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இதனை யாழ். றோட்டறிக் கழகத்தின் தலைவர் Rtn.Phf.அனுராஜ், வலிகாமம் வடக்கிற்கான தவிசாளர் திரு.சோ. சுகிர்தன், யா/ யூனியன் கல்லூரியின் அதிபர் திரு. வரதன் மற்றும் யா/ தந்தை செல்வா ஆரம்பப் பாடசாலையின் அதிபர் திரு. வாமதேவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
றோட்டறக்ட் கழகங்களின் செயற்பாடுகள் மற்றும் சமூகத்திற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விடயங்கள் அடங்கியதாக இந்தப் பேருந்து நிழற்குடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலை மாணவர்களும் வாசகர்களும் பயன்பெறும் வகையிலான நூலகத் தொகுதி ஒன்றும் இதனுடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாக காணப்படுகிறது.
இக்கழகமானது 26 வருடங்களாக இயங்கி வரும் சமூக சேவைக் கழகங்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
