வடக்கில் இன்றும் அதிகளவு தொற்றாளர்கள் பதிவு
jaffna
patient
north covid
By Vanan
யாழ். மாவட்டத்தில் 36 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று திங்கட்கிழமை (மே 10) கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 778 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், யாழ். மாவட்டத்தில் 36 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்