யாழில் கூட்டுறவு உற்பத்திப் பொருட்களின் விற்பனை கண்காட்சி!
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பமான அதே நாளான நேற்று (23.01.2026) உள்ளூரிலும் கூட்டுறவாளர்களின் கண்காட்சியும் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினால் யாழ். மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களினுடைய உற்பத்திப் பொருட்களின் விற்பனையும் கண்காட்சி நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (23.01.2026) ஆரம்பமானது.
அதன்படி, குறித்த கண்காட்சி நிகழ்வு தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது.
கூட்டுறவுச் சங்கம்
நேற்று (23.01.2026) காலை குறித்த நிகழ்வினை சம்பிரதாயபூர்வமாக வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஆரம்பித்து வைத்தார்.

அரசியல், சமூக ஆய்வாளரான செல்வின் இரேனியஸ் கூட்டுறவின் முக்கியத்துவமும் அதன் இன்றைய நிலையும் தொடர்பில் சிறப்புரையாற்றினார்.
புடவை நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம், சிக்கன கடன்வழங்குவோர் கூட்டுறவு சங்கம், கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கம், பேக்கரி பொருள்கள் உற்பத்தி சங்கம், தோற்பொருள் அபிவிருத்தி கூட்டுறவு சங்கம், பழ உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் என பல்வேறு சங்கங்களும் இணைந்து கொண்டு தங்களது தரமான உற்பத்திகளை காட்சிப்படுத்தியுள்ளன.
நாளையுடன் (25.01.2026) நிறைவடையவுள்ள இந்தக் கண்காட்சியில் கூட்டுறவு சபையின் அங்கத்துவ சங்கங்களின் உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |




