யாழில் இருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம்

Indian fishermen Narendra Modi Sri Lanka Fisherman
By Shalini Balachandran Apr 03, 2025 05:26 AM GMT
Report

யாழ் (Jaffna) மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் (India) பிரதமரிடம் பகிரங்க கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இக்கோரிக்கையை கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ளனர்.

இதனடிப்படையில், பிரதமர் மோடிக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் நேற்று (02) கையளித்துள்ளனர்.

யாழைச் சேர்ந்த குடும்பஸ்தரின் கால் துண்டிப்பு - கோர விபத்தால் நேர்ந்த துயரம்

யாழைச் சேர்ந்த குடும்பஸ்தரின் கால் துண்டிப்பு - கோர விபத்தால் நேர்ந்த துயரம்

அத்துமீறிய தொழில் 

இதன்பின்னர் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதீசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

யாழில் இருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம் | Jaffna Fishermen S Urgent Appeal To Indian Pm

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையினால் இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சனைகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென மொடர்ச்சிசியாக நாங்கள் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறோம்.

இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இந்திய அரசுகள் 

ஆனால், இலங்கை இந்திய அரசுகள் இந்தப் பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்காத நிலைமையே காணப்படுகிறது.

யாழில் இருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம் | Jaffna Fishermen S Urgent Appeal To Indian Pm

எனவே, இலங்கைக்கு வருகின்ற இந்தியப் பிரதமர் இலங்கை இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சரியான தீர்வொன்றை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம்.

அதாவது எமது கடற்பரப்பிற்குள் எக்காரணம் கொண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி வரக்கூடாது.

தபால் மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பம்

தபால் மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பம்

எதிராக நடவடிக்கை

அதனையும் மீறி வந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

யாழில் இருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம் | Jaffna Fishermen S Urgent Appeal To Indian Pm

அத்தோடு இந்திய கடற்றொழிலாளர்களினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழத்துள்ள எமது கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளோம்.

மேலும், தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்களினால் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக தொடர்ந்தும் குரல் எழுப்பி முன்னரைப் போன்று போராட்டங்களை முன்னெடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் சிஐடியில் மனுத் தாக்கல்

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் சிஐடியில் மனுத் தாக்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024