உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : யாழ் இந்துக் கல்லூரி வரலாற்று சாதனை
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடந்த 25 வருடங்களில் இம்முறை அதிகூடிய மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதன்படி, 2025 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரியின் 64 மாணவர்கள் 3ஏ சித்திகளையும், 31 மாணவர்கள் 2ஏ சித்திகளையும், 21 மாணவர்கள் ஏ2பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
இவர்களில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த 19 மாணவர்களும், பௌதீக விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த 42 மாணவர்களும், கலைப் பிரிவைச் சேர்ந்த 02 மாணவர்களும், வணிகப் பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவர் என மொத்தம் 64 பேர் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி
குறித்த பரீட்சைக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து 445 மாணவர்கள் விண்ணப்பித்ததுடன் 418 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் 342 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பரீட்சை சித்திவீதம் 81.82 வீதமாக பதிவாகியுள்ளது.

மேலும் கடந்த 25 ஆண்டுகளில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 50ற்கு மேற்பட்ட மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ள நிலையில் முறையே 2023 இல் 56 மாணவர்களும் 2024 இல் 55 மாணவர்களும் 3ஏ சித்திகளைப் பெற்றிருந்தனர்.
அத்துடன் 2024ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்ற நிலையில் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்