யாழில் கடன் சுமை காரணமாக இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
யாழில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடன்சுமை காரணமாக அவர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் நேற்று முன்தினம் (06-02-2026) வீட்டிலிருந்து வேலைக்கெனப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து, சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் நேற்று (07-02-2026) உயிர்மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உறவினர்களிடம் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |