30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம்
யுத்தத்தின் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இயங்காத நிலையிலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீள இயக்குவதற்கான யோசனையினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைத்துள்ளது.
அதற்கமைய, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர் குழுவினர் கடந்த 07.03.2025 அன்று சீமெந்து தொழிற்சாலையை பார்வையிடனர்.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் (25) தொழில் மற்றும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த குறித்த சீமெந்து தொழிற்சாலையினை பார்வையிட்டார்.
கைத்தொழில் மையமாக மாற்றுதல்
இதன்போது சீமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் மையமாக மாற்றி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

இதேவேளை சீமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் வலயமாக மாற்றுவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா தனது கருத்தினை தெரிவித்தார்.
மேலும் இந்த விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்