யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை குறித்து வெளியான தகவல்
அனுராதபுரத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இடம்பெற்ற யாழ் ராணி தொடருந்து சேவை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
டித்வா சூறாவளி, வெள்ளம் காரணாக சேதமடைந்த தொடருந்து பாதை திருத்த வேலைகள் காரணமாகவே தொடருந்து சேவைகள் காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த தொடருந்து சேவை இன்று (01) முதல் காங்கேசன்துறையில் இருந்து ஓமந்தை வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் ராணி தொடருந்து
அதன்படி, காங்கேசன்துறையில் இருந்து காலை 6.00 மணிக்கு யாழ் ராணி தொடருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஓமந்தையில் இருந்து மாலை 03.45 இற்கு காங்கேசன்துறை நோக்கி குறித்த தொடருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சேதமடைந்த தொடருந்து பாதைகளை புனரமைப்பதற்காக கொழும்பு கோட்டையிலிருந்து பயணிக்கும் தொடருந்துகள் ஜனவரி 19ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்