யாழ் குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
jaffna
people
department
land
By Vanan
யாழ். மாவட்டச் செயலக காணிப் பதிவக பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
யாழ். மாவட்ட காணிப் பதிவகத்தின் செயற்பாடுகள் இன்று (06) ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்டளவிலான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சேவையின் அவசர தன்மையை கருதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை, 021-2225681 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொண்டு சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.