யாழில் இடம்பெற்ற சுயமரியாதை நடைபவனி: கனேடிய உயர்ஸ்தானிகர் பங்கேற்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான பாகுபாடுகளைப் பற்றி வலியுறுத்தியும் சுயமரியாதை நடைபயணம் இடம்பெற்றுள்ளது.
சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட சுயமரியாதை நடைபயணத்தில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு நடைபயண பேரணி முன்னெடுக்கப்பட்டது.
கனேடிய உயர்ஸ்தானிகர்
சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக, ‘ இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்’ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை நடைபயணம் இடம்பெற்றது.

குறித்த நடைபயணத்தில் சிறிலங்காவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வாஸ் உட்பட தூதரக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |