ஒரே தொலைபேசி அழைப்பில் விடயத்தை முடித்துக்கொண்ட மதத்தலைவர்!!
அண்மையில் இடம்பெற்ற யாழ் மாநகரசபை மேயர் நியமனம் சம்பந்தமாக ஆரம்பத்தில் இரண்டு நபர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்ததாம்.
ஓன்று ஆனோல்ட் மற்றது சிறில்.
இருவருமே தகுதியானவர்கள் என்பதால் யாரைத் தெரிவுசெய்வது என்பது பெரிய தடுமாற்றமாகவே இருந்தது அனைவருக்கும்.
ஆனால் யாழ்பாணத்தில் உள்ள ஒரு மதத்தலைவர் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் விடயத்தை சிம்பிளாக முடித்துவிட்டாராம்.
'ஆனோல்ட்தான் மேயர். உடனே நியமியுங்கள்...' இவ்வளவுதான் அவர் கூறியவிடயமாம்.
கப் சிப் பென்று நியமனம் நடந்து முடிந்துவிட்டதாம்.
மதத்தலைவர் ஒருவருக்கு தமிழரசுக்கட்சியின் தலைமை வழங்குகின்ற மரியாதையெல்லாம் சரிதான். ஆனால் இங்கே தமிழ் மக்கள் எங்கே என்பதுதான் எங்கள் கேள்வி.
மேயர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் -மதத் தலைவர்களால் அல்ல.
மதத்தலைவர்கள் மக்களிடம் வேண்டுமானால் கோரிக்கை வைக்கலாம். 'குறிப்பிட்ட அவரை தெரிவுசெய்யுங்கள். அவர் நல்லவர்.. வல்லவர்..' என்று மதத்தலைவர்கள் மக்களிடம்தான் கூறவேண்டும்.
அரசியல் கட்சியின் தலைமையிடம் அல்ல.
அரசியல் கட்சியின் தலைமை மக்கள் ஆணைக்குத்தான் மதிப்புக்கொடுக்கவேண்டுமே தவிர, மதத்தலைவர்களின் ஆணைக்கு அல்ல.
தமிழரசுக்கட்சியின் தலைமை ஒன்றுக்குமே உதவாத தலைமையாக மாறிவருகின்றது.
ஜனாதிபதி தெரிவின்போது யாரைத் தெரிவுசெய்வது என்ற கலந்துரையாடலின்போது தமிழ் மக்களுக்கு எது நன்மை, இலங்கையின் பொருளாதாரத்துக்கு எது நன்மை என்று ஆராயாமல், அயல்நாட்டின் தூதரக அதிகாரி கூறிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக விழுந்தடித்துக்கொண்டு முடிவு எடுத்து முதல், கடைசியில் யாழ் மாநகர மேயர் தெரிவின்போதுவரை - எந்த முடிவுமே உங்களால் சுயமாக எடுக்கமுடியாவிட்டால், பேசாமல் தலைமைப் பதவியை கட்சியின் முந்திரிக்கொட்டையிடமோ அல்லது கிளிநொச்சி நாம்பனிடமோ கொடுத்துவிட்டு இளைப்பாறலாமே.