நெடுந்தீவு கொடூர படுகொலைக்கான காரணம் - கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!

Jaffna Attempted Murder Sri Lanka Police Investigation Crime
By Pakirathan Apr 23, 2023 08:52 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

"அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன், எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன்.

தனியாக நகைகளை கொள்ளையிட்டால் பிடித்துவிடுவார்கள், சம்பவத்தை திசை திருப்பவே அனைவரையும் கொலை செய்தேன்" இவ்வாறு, கைது செய்யப்பட்டவர் காவல்துறையினருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகள், ஆடைகள் மற்றும் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

படுகொலை

நெடுந்தீவு கொடூர படுகொலைக்கான காரணம் - கொலையாளியின் பகீர் வாக்குமூலம்! | Jaffna Neduntheevu Murder Police Investigation

நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில், கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் 5 சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன.

100 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான காவல்துறைக் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர். 

கொலையாளி கைது

நெடுந்தீவு கொடூர படுகொலைக்கான காரணம் - கொலையாளியின் பகீர் வாக்குமூலம்! | Jaffna Neduntheevu Murder Police Investigation

காவல்துறைக் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த நபர் நெடுந்தீவில் நடமாடிவிட்டு நேற்றுக் காலை அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

பின்னர், நேற்றிரவு புங்குடுதீவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 51 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 26 பவுண் தங்கநகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போதே சந்தேக நபர் குறித்த கொலையை தானே செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

வாக்குமூலம்

நெடுந்தீவு கொடூர படுகொலைக்கான காரணம் - கொலையாளியின் பகீர் வாக்குமூலம்! | Jaffna Neduntheevu Murder Police Investigation

"நான் நெடுந்தீவு வந்தால் குறித்த வயோதிபர்களின் வீட்டில்தான் தங்கிச் செல்வேன், அதுபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தேன்.

அங்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நகைகள் அணிந்திருந்தனர்.

அனைவரது நகைகளையும் அபகரித்து விற்பனை செய்து வரும் பணத்தில் கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன்.

அதனால் நேற்று அதிகாலை 4.30 பின்னர் நித்திரையிலிருந்த அனைவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க எண்ணினேன்.

நகைகளை மட்டும் அபகரித்துச் சென்றால் காவல்துறையினர் எளிதில் பிடித்துவிடுவார்கள், அதனால் காவல்துறை விசாரணையை திசை திருப்ப அனைவரையும் கொலை செய்தேன்" என சந்தேக நபர் காவல்துறை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் 

நெடுந்தீவு கொடூர படுகொலைக்கான காரணம் - கொலையாளியின் பகீர் வாக்குமூலம்! | Jaffna Neduntheevu Murder Police Investigation

சந்தேக நபரை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று ஏனைய சான்றுப்பொருட்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேக நபர் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.



மரண அறிவித்தல்

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், அக்கராயன், Markham, Canada

19 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Walthamstow, United Kingdom

14 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
நன்றி நவிலல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
நன்றி நவிலல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
நன்றி நவிலல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

சரவணை, கொழும்பு

19 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Wellawatte, சுழிபுரம் கிழக்கு, தொல்புரம் கிழக்கு, லியோன், France

20 May, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024