தமிழர் பண்பாடு தழைத்தோங்கும் லங்காசிறியின் நம்மவர் பொங்கல் விழா!
தமிழர் திருநாளான தைப்பொங்கலை சிறப்பிக்கும் வகையில், IDM தனியார் பல்கலைகழகத்தின் அனுசரணையில் லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடகங்கள் இணைந்து நடத்தும் “நம்மவர் தைப்பொங்கல் விழா” எதிர்வரும் 15ஆம் திகதி தெகிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானத்தில் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.
தமிழ் மரபும் பண்பாடும் தழைத்தோங்கும் இந்த விழாவில், பொங்கல் பொங்கும் போட்டியுடன் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், இசை மற்றும் நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
குறித்த நிகழ்வுக்கு இணை அனுசரணையாளர்களாக எம்முடன் FADNA மற்றும் little lion கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
குடும்பத்தோடு கலந்து தைப்பொங்கலின் ஆன்மீகமும் சமூக மகிழ்ச்சியும் அனுபவிக்க ஏற்ற ஒரு அரிய வாய்ப்பாக இந்த விழா உங்களுக்கு அமையவுள்ளது.
அந்த வகையில் தமிழர் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் நடைபெறும் இந்த “நம்மவர் தைப்பொங்கல் விழாவில்” அனைத்து மக்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு லங்காசிறி, ஐபிசி தமிழ் ஊடகம் அன்புடன் அழைக்கிறது.
இடம் - தெகிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானம்
திகதி - 15.01.2025
நேரம் - காலை 08.00 மணி