யாழ். கொழும்பு தொடருந்து சேவை தொடர்பில் முக்கிய அறிவித்தல்
யாழ்ப்பாணம் (Jaffna) - காங்கேசன்துறை அதிவேக தொடருந்து சேவை மீண்டும் தினசரி இயங்கும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் தொடருந்து திணைக்களம் (Department of railways) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவை தினசரி இயக்கப்படும்
கொழும்பு - காங்கேசன்துறை அதிவேக தொடருந்து சேவை தற்போது வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சேவையை மீண்டும் தினசரி முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த மாதத்திற்குள் இந்த அதிவேக தொடருந்து சேவை தினசரி இயக்கப்படும் என்றும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய - இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்
காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவையின் இலங்கைக்கான இயக்குனர் திரு.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
அசாதாரண காலநிலை காரணமாக கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த கப்பல் சேவையானது எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
