பொங்குதமிழ் நிகழ்வுக்கு ஒன்று திரள்வோம் : யாழ். பல்கலைக்கழகம் அழைப்பு!
ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வை அனுஷ்டிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று (17.01.2026) மதியம் 12 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அனைத்து மாணவர்களும், பொதுமக்களும் உணர்வோடு அணி திரளவேண்டும் என மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொங்கு தமிழ் நிகழ்வு
ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் 2001 இல் முதன்முறையாக பொங்கு தமிழ் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் தாயகம் அங்கீகரிக்கப்படல், தமிழரின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல், தமிழ் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்படல் போன்ற மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அந்தவகையில் இந்த பொங்குதமிழ் நிகழ்வானது வருடாவருடம் அனுஷ்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |