யாழ் பல்கலை மாணவன் கத்தியுடன் கைது!
Jaffna
University of Jaffna
By pavan
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனை நேற்றிரவு (28) கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை

வர்த்தக நிலையம் ஒன்றுக்குக் கத்தியுடன் சென்று வர்த்தக நிலையத்தில் வேலை செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளரால் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மாணவனைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவனைக் கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.