ஜனாதிபதியிடம் யாழ். வடமராட்சி ஊடக இல்லம் விடுத்துள்ள வேண்டுகோள்

Sri Lankan Tamils Sri Lankan Peoples Taraki Sivaram Journalists In Sri Lanka
By Dilakshan Apr 28, 2025 02:59 PM GMT
Report

இராணுவத்தினரது ஆக்கிரமிப்பில் உள்ள, மாமனிதர் தராகி சிவராம் அவர்களினால் கிளிநொச்சி அறிவியல் நகரில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஊடக கல்லூரி வளாகத்தை உடனடியாக விடுவித்து அதனை யாழ். பல்கலைக்கழகத்தின் கீழ் தனி அலகாக கொண்டுவந்து ஊடக கற்கை பீடமாக தொடர்வதற்குரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் தமிழ் ஊடகத்துறையினர் சார்பில் யாழ்.வடமராட்சி ஊடக இல்லம் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்.இலங்கையில் இடம்பெற்ற சகல ஊடகவியலாளர் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேசவிசாரணை ஒன்று நடத்தப்படுவதன் மூலம் நீதியை நிலைநாட்ட புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் என யாழ். வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி நிற்கின்றது.

21வயது இளைஞன் படுகொலை: ஐவருக்கு மரண தண்டனை

21வயது இளைஞன் படுகொலை: ஐவருக்கு மரண தண்டனை

தராகி சிவராம் படுகொலை

இலங்கையின் மிக முக்கிய ஊடகவியலாளர்களில் ஒருவராக சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கிய மாமனிதர் தராகி சிவராம் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை உரிய விசாரணைகள் எவையும் இன்றி ஆட்சிகள் மாறினாலும் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமலும், அதற்கான நீதி பொறிமுறை உருவாக்கப்படாமலும் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு வருகின்றமை இலங்கையின் உள்ளக பொறிமுறைக்குட்பட்டதான பாதுகாப்பு மற்றும் நீதித்துறை மீதான ஐயப்பாட்டினை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

ஜனாதிபதியிடம் யாழ். வடமராட்சி ஊடக இல்லம் விடுத்துள்ள வேண்டுகோள் | Jaffna Vadamaradchi Media House Letter President

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் துப்பாக்கி முனையில் இடம்பெற்ற படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், கைதுகள் உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் தமிழ் ஊடகத்துறையை அச்சுறுத்தி அடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வந்த முனைப்புகள் தற்போதும் புதிய புதிய வடிவங்களில் தொடர்ந்தே வருகின்றன.

தமிழ் மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து வரும் ஊடகத்துறையை நசுக்குவதன் ஊடாக தமிழர்களின் குரலை மௌனிக்கச் செய்யும் நோக்கிலேயே இவை தொடர்கின்றன.

இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் இலங்கை அரச படைகள் மற்றும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய துணை ஆயுதக்குழுவினருமே இருந்துள்ளனர் இருந்து வருகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

ஜனாதிபதியிடம் வேண்டுகோள் 

அவ்வாறு இருந்தும் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட பல ஊடகவியலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணமல் ஆக்கப்பட்டமையுடன் தொடர்புடைய குற்றவாளிகளான மேற்குறித்த எவரொருவரும் நீதி பொறிமுறை ஊடாக கண்டுபிடிக்கப்படாத நிலையே தற்போதுவரை தொடர்கின்றது.

ஜனாதிபதியிடம் யாழ். வடமராட்சி ஊடக இல்லம் விடுத்துள்ள வேண்டுகோள் | Jaffna Vadamaradchi Media House Letter President

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை மீதான இவ்வாறான அச்சுறுத்தல் நிலையானது இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பவற்றின் மீதான கொடூரமான அடக்குமுறையின் வெளிப்பாடாகும்.

கொலைக் கலாசாரத்தின் பின்னணியில் ஊடகத்துறை மீதான இவ்வாறான தலையீடுகள் தொடர்வதனை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன் இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் இதுவரைகாலமும் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதியை நிலைநாடட் புதிய அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் என, படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு நாளில் யாழ். வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி நிற்கின்றது.

இதேவேளை, தற்போது இராணுவத்தினரது ஆக்கிரமிப்பில் உள்ள, மாமனிதர் தராகி சிவராம் அவர்களினால் கிளிநொச்சி அறிவியல் நகரில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஊடக கல்லூரி வளாகத்தை உடனடியாக விடுவித்து அதனை யாழ் பல்கலைக் கழகத்தின் கீழ் தனி அலகாக கொண்டுவந்து ஊடக கற்கை பீடமாக தொடர்வதற்குரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் தமிழ் ஊடகத்துறையினர் சார்பில் நாம் வினயமாக கேடடுக் கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்தம்பிதம் அடைந்த நாடு: அநுர அரசு மீது பாய்ந்த குற்றச்சாட்டு

ஸ்தம்பிதம் அடைந்த நாடு: அநுர அரசு மீது பாய்ந்த குற்றச்சாட்டு

பிரதமர் ஹரிணிக்கு எதிராக சுமந்திரன் முறைப்பாடு

பிரதமர் ஹரிணிக்கு எதிராக சுமந்திரன் முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, Islington, United Kingdom

28 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018