யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் இன்றைய கொரோனா நிலைவரம் வெளியானது
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் உட்பட மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ் பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் 404 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நால்வருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவரும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ஆகியவற்றில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்கள் நால்வரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டவர்கள்" என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.