அவுஸ்ரேலியாவில் இலங்கை இளைஞனின் மோசமான செயல் - நீதிமன்றம் கொடுத்த தண்டனை
அவுஸ்திரேலியாவில் பதின்ம வயதுக்குட்பட்ட சிறுமிகளை நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு அச்சுறுத்திய குற்றத்திற்காக 24 வயதான இலங்கை இளைஞருக்கு விக்டோரியா நீதிமன்றம் 13 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த மாணவன் உயர் கல்வியை தொடர்வதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளதுடன் கண்டியை வசிப்பிடமாகக் கொண்டுள்ளார்.
அந்த மாணவன் தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு பல சிறுமிகளை மிரட்டியுள்ளார். இல்லாவிட்டால் போலியான போட்டோக்கள் தயாரித்து பெண்களின் தோழிகளுக்கு அனுப்பப்படும் எனவும் எச்சரித்துள்ளார். அச்சுறுத்தப்பட்ட சிறுமிகளில் 10 வயது சிறுமியும் அடங்குவார்.
அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாணவர் 2020 இல் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் பின்னர் அவருக்கு 13 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், தண்டனைக் காலம் முடிந்ததும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.