ஒன்பது மாதங்களில் 12 பில்லியன் ரூபா நட்டம் : மின்சாரத்துறை அமைச்சர் வலியுறுத்து!

Sri Lanka Ceylon Electricity Board Kanchana Wijesekera
By Beulah Nov 24, 2023 04:41 PM GMT
Report

ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளில் மாத்திரம் மின்சார சபை 12 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது எனவும், இலாபமடைந்தால் அதன் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (24) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் அறியத்தருகையில்,

அரசியலமைப்பு பேரவையின் இறுதி நியமனம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அரசியலமைப்பு பேரவையின் இறுதி நியமனம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எரிப்பொருள் நெருக்கடி

“எரிபொருள் மற்றும் மின்சார கட்டமைப்பில் கடந்த ஆண்டு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டோம்.

ஒன்பது மாதங்களில் 12 பில்லியன் ரூபா நட்டம் : மின்சாரத்துறை அமைச்சர் வலியுறுத்து! | January September Electricity Boardlost 12 Billion

எரிபொருள் பற்றாக்குறை, மின்விநியோக துண்டிப்பை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்ற போராட்டம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.

பாரிய சவால்களுக்கு மத்தியில் அமைச்சராக பொறுப்பேற்றேன். நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிபர், பிரதமர் உட்பட சகல தரப்பினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலக சந்தையின் விலைக்கேற்ப எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கமைய 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 09 ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது.

மின்சார கட்டணத்தை அதிகரிக்காமல் மின்னுற்பத்தி செலவுகளை முகாமைத்துவம் செய்ய 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு முதல் காலாண்டு வரை திறைசேரி சுமார் 400 பில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளது.

மின்னுற்பத்திக்கான கேள்வி

நாட்டின் மின்னுற்பத்திக்கான கேள்விக்கு அமைய மின்னுற்பத்தி நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவில்லை.

ஒன்பது மாதங்களில் 12 பில்லியன் ரூபா நட்டம் : மின்சாரத்துறை அமைச்சர் வலியுறுத்து! | January September Electricity Boardlost 12 Billion

சம்பூர் அனல் மின்நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் உயர் நீதிமன்றம் சென்றார்கள்.

இதனால் சம்பூர் அனல் மின்நிலைய திட்டம் கைவிடப்பட்டது. இதனால் மின்சார சபை வருடாந்தம் 95 பில்லியன் ரூபாவை வருடாந்தம் மேலதிகமாக செலவிட்டது.

அதனை போல் உமா ஓயா திட்டத்துக்கு எதிராக பண்டாரவெல மற்றும் ஊவா வெல்லச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதனால் 9 பில்லியன் ரூபா தாமத கட்டணத்தை செலுத்த நேரிட்டது. மின்வலுத்துறை தொடர்பில் எடுத்த தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவரும் இன்றைய நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டும்.

இலங்கை மின்சார சபை

நிறைவடைந்த 10 மாத காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை 60 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளமை அடிப்படையற்றது.

ஒன்பது மாதங்களில் 12 பில்லியன் ரூபா நட்டம் : மின்சாரத்துறை அமைச்சர் வலியுறுத்து! | January September Electricity Boardlost 12 Billion

மின்சார சபை கடந்த 09 மாத காலப்பகுதியில் மாத்திரம் 12 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

மின்சார சபை இலாபமடையுமாக இருந்தால் அதன் பயனை நாட்டு மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம். மின்சார சபையின் செலவுகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் மின்சார சபையின் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்குவதை நிறுத்தினேன்.

அத்துடன் வருடாந்தம் வழங்கப்படும் 25 சதவீத சம்பள அதிகரிப்பை இரத்து செய்தேன். நாட்டின் சக்தி வலுத்துறையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அம்பாந்தோட்டை பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்படும். இதனால் பலருக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

அத்துடன் அடுத்த மாதம் மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்,யாழ். பூநகரி மின்னுற்பத்தி திட்டம்,சம்பூர் அனல் மின்நிலைய திட்டம்,மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் மின்னுற்பத்தி திட்டம் உள்ளிட்ட ஆறு மின்னுற்பத்தி திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்.” என்றார்.

இஸ்ரேலிய வீரர்களின் தலை கவசங்கள் மாத்திரம் ஏன் இப்படி இருக்கின்றன.! (காணொளி)

இஸ்ரேலிய வீரர்களின் தலை கவசங்கள் மாத்திரம் ஏன் இப்படி இருக்கின்றன.! (காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026