நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை தப்பிக்கச் செய்த ஜே.கே பாய்!
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடையதாக இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட ஜே.கே பாய் என்பவர் இதுவரையில் நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை நாட்டிலிருந்து தப்பிக்கச் செய்துள்ளதாக விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
அதன்படி, ஜே.கே பாய் என்பவர் பல ஆண்டுகளாகவே இவ்வாறான குற்றத் தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் தற்போது சர்வதேச மனித கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தெற்காசியாவில் உள்ள மனித கடத்தல்காரர்களுக்கும் இவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மனித கடத்தல்காரர்கள்
இதேவேளை, பாதாள உலகக் குழுக்களை சேர்ந்தவர்களை இந்தியாவில் தங்கவைத்து துபாய்க்கு தப்பிச் செல்லவும் இவர் உடந்தையாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கணேமுல்ல சஞ்ஜீவ கொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் தங்கியிருந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றார்.
அதன்படி, இஷாரா செவ்வந்தி கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அம்பாள்குளம் பகுதியில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் செவ்வந்தி இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
