சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Johnston Fernando
Sri Lankan political crisis
Galle Face Riots
By Kanna
கடந்த 09ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
நாமல் ராஜபக்ச உட்பட பல அரசியல் பிரமுகர்களிடம் கடந்த 09ஆம் திகதி தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் எடுத்து வருகின்ற நிலையில் தற்பொழுது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது.
இதேவேளை, கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரையில், ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, கைது செய்யப்பட்டவர்களில் 719 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 4 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்