கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : அடையாள அணிவகுப்பில் தப்பிய துப்பாக்கிதாரி

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order Ganemulle sanjeewa
By Raghav Jun 04, 2025 11:17 AM GMT
Report

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சமிந்து தில்ஷான் பியுமங்க நீதிமனறத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

பூஸ்ஸ (Boossa) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபர், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் முற்படுத்தப்பட்டுள்ளார். 

சந்தேக நபரை அடையாளம் காண இரண்டு சாட்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டனர், ஆனால் அவர்கள் சந்தேக நபரை அடையாளம் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

கல்வி அமைச்சு வெளியிட்ட எச்சரிக்கை: சிக்கப்போகும் அதிகாரிகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட எச்சரிக்கை: சிக்கப்போகும் அதிகாரிகள்

பலத்த பாதுகாப்பு 

பின்னர் சந்தேக நபர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் உத்தியோகபூர்வ அறையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : அடையாள அணிவகுப்பில் தப்பிய துப்பாக்கிதாரி | Kanemulla Sanjeeva Murder Case

இதன்போது சந்தேக நபரை இந்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் சந்தேக நபரை ஸ்கைப் மூலம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவருமான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு : கடற்படையினருக்கு சந்திரசேகர் பணிப்புரை

கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு : கடற்படையினருக்கு சந்திரசேகர் பணிப்புரை

நீதிமன்ற விசாரணை

நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 05 ஆம் எண் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சாட்சிக்கூண்டில் நின்ற வேளையில், கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : அடையாள அணிவகுப்பில் தப்பிய துப்பாக்கிதாரி | Kanemulla Sanjeeva Murder Case

குற்றவியல் சட்டப் புத்தகத்திற்குள் சூட்சுமமான முறையில் மறைத்து எடுத்து வந்த துப்பாக்கியால் சஞ்சீவவை சுட்டுப் படுகொலை செய்ததுடன், அங்கிருந்து சந்தேக நபர்கள் உடனடியாக தப்பிச்சென்றனர்.

இதற்கு செவ்வந்தி என்ற பெண்ணும் உடந்தையாக செயற்பட்டதுடன், துப்பாக்கி மறைத்து வைத்திருந்த புத்தகத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து வந்ததும் அந்த பெண்தான் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டினை நடத்திய பிரதான சந்தேகநபர் 8 மணித்தியாலங்களுக்குள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஆனால், இந்த தாக்குதலுக்கு உதவிய இஷாரா செவ்வந்தி எனும் பெண் மாயமான நிலையில் தற்போது வரை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தொடரும் கைதுகள் : எதற்கும் தயாராக இருக்கின்றேன் - டக்ளஸ் தேவானந்தா

தொடரும் கைதுகள் : எதற்கும் தயாராக இருக்கின்றேன் - டக்ளஸ் தேவானந்தா

சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்