வழிப்பாதை மறிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்டுள்ள கப்பல்துறை கண்ணகி அம்மன் ஆலயம்..!
திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் பிரதேசத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கப்பல்துறை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான வழிப்பாதை முற்றிலுமாக இழந்து ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மிக வேகமாக நடைபெற்றுவரும் " சூரிய மின்சக்தி உற்பத்தி" மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்ட விஸ்தரிப்பு திட்டத்துக்கு மத்தியில் குறித்த நிலை உருவாகியுள்ளது.
தம்பலகாமம் - திருகோணமலை பிரதான சாலையிலிருந்து முத்துநகர் பிரதேசத்தினூடாக செல்லும் பாதையின் இறுதியில் தனியார் காணியொன்றில் அமைந்துள்ளது.
இதன்படி வரலாற்று சிறப்பு மிக்கதும், இந்து கலாச்சார அமைச்சினால் பதிவு செய்யப்பட்டுள்ளதுமான கப்பல்துறை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தை சென்றடையும் வழிப்பாதை சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்துக்கான நிரந்தர வேலியமைப்பினால் முற்றுமுழுதாக வழிப்பாதை மறிக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.
நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிர்க்கதியடைந்துள்ளதுடன் ஆலய நாளாந்த மாதாந்த மற்றும் வருடாந்த ஆலய பூசைகள் கிரியைகள் தடைப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் ஆனிமாதம் 01 ஆம் திகதி அழகு வனப்பகுதியில் அமைந்துள்ள இவ் ஆலயத்தில் இரண்டு நாட்கள் தங்கிநின்று மேற்கொள்ளப்படும் ஆலய வருடாந்த பொங்கல் விழா திருக்குளிர்த்தி கிரியை மற்றும் ஆலய பசுமைத்திட்ட நிகழ்வுகள் குறித்த கவலையை மக்கள் எழுப்பியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதரும் இந்த ஆலயத்துக்கான வழிப்பாதையொன்றினை ஏற்படுத்தி தருமாறு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு பல தடவைகள் ஆலய நிர்வாக சபையினரால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இதுவரை சரியான தீர்வு கிட்டவில்லையென ஆலய நிர்வாகசபைத் தலைவர் பொ. பற்குணராஜா கவலை தெரிவித்துள்ளார்.
எனவே இவ்விடயத்தில் அரச அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 5 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்