தாயகத்தை கபளீகரம் செய்யும் தென்னிலங்கை - பாரிய எதிர்ப்பு நடவடிக்கை!
காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை சிறிலங்கா கடற்படை முகாமிற்காக சுவீகரிப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் - நீலங்காடு பகுதியில் உள்ள 40 ஏக்கர் காணியை அளவிடுவதற்கு இன்றைய தினம் முயற்சித்த போதே பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த காணியை அளவிடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் சென்ற போது அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
கையொப்பமிட்ட மக்கள்
அதனையடுத்து அங்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினர், மக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்கு அளவிடுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று எழுதி ஒப்பமிடப்பட்ட எழுத்து மூலமான ஆவணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் காணியின் உரிமையாளர்கள், சமூகமட்ட அமைப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



