மாவீரர் ஒருவரின் இறுதி விருப்பம்! தலைமுறைகள் தழுவிய மாற்றம்

Sri Lankan Tamils Tamils Sri Lankan Peoples
By Dilakshan Nov 05, 2025 01:27 PM GMT
Report

1980களின் இறுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரிவொன்றில் கடமையாற்றியிருந்த மேஜர் காந்தரூபன் என்பவர் தொடர்பான நெகிழ்ச்சியான கதையொன்று தற்போது பகிரப்பட்டு வருகிறது.

காந்தரூபன் என்ற இளைஞர், தாய் தந்தையரை இழந்த நிலையில் யோகராஜா தம்பதியினரின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார்.

தாயகம் எதிர்கொண்ட வலி அனைத்தும் அவரை தீவிரமாகப் பாதித்ததன் காரணமாக இளம் வயதிலேயே போராட்டத்தில் ஈடுபட அவர் ஈர்க்கப்பட்டார்.

ஒரு மோதலின் போது, எதிரி படையினருடன் நேரிட்ட போரில் காயமடைந்த காந்தரூபன், இயக்கத்தின் மரபுப்படி உயிரை மாய்க்க முயன்றபோதும், அருகில் இருந்த தோழர்கள் அவரை மீட்டு காப்பாற்றினர்.

உயிர் தப்பினாலும், அருந்திய விஷத்தால் அவரது உடல் மிகுந்த தளர்ச்சி அடைந்தது.

வைத்தியர்கள் வழங்கிய ஆலோசனைப்படி, அவருக்கு சத்துணவு தேவைப்பட்டதால், அதை புரிந்துக் கொண்ட தேசியத் தலைவர், பசு மாடு ஒன்றை வாங்கி அவருக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தார்.

அதன்போது, தலைவரின் துணைவியாரே காந்தரூபனை நேரடியாக கவனித்த நிலையில், சில வாரங்களில் அவர் மீண்டு மீண்டும் பணியில் இணைந்தார்.

எவ்வாறாயினும், காந்தரூபனுக்கு தனது உடல் மீண்டிருந்தாலும், மனதில் ஒரு புதுக் கனவு உருவாகி இருந்தது.

ஒருநாள் தலைவரை நெருங்கிப் பேச கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர், “தமிழீழத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் என்று எவரும் இருக்கக் கூடாது; அவர்களை நமது இயக்கம் அரவணைக்க வேண்டும்” என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அந்த எண்ணம் பின்னர் ஒரு உண்மையான முயற்சியாக மாறியது. 1993 நவம்பர் 1ஆம் திகதி மேஜர் காந்தரூபனின் விருப்பத்தின் படி, காந்தரூபன் அறிவுச்சோலைச் சிறுவர் இல்லம்’ திறக்கப்பட்டது.

அந்த இல்லம், வடமராட்சி முதல் கிழக்குக் கடற்கரை வரை பெற்றோரை இழந்த பல பிள்ளைகளுக்கான புதிய இல்லமாக மாறியது.

இன்று, அந்த இல்லத்தில் வளர்ந்த குழந்தைகள் பலரும் கல்வியாளர்களாகவும், சமூகப் பணியாளர்களாகவும், தாயக முன்னேற்றத்தில் பங்காற்றுபவர்களாகவும் விளங்குகிறார்கள். 

அந்தவகையில், 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த இல்லம் இவ்வருடத்துடன் தனது 32 ஆம் வருட நினைவு நாளை எட்டியுள்ளது.

யாழ் உரும்பிராயில் நடைபெற்ற கண்ணிவெடித் தாக்குதல்: முற்றுகைப் பீதியில் இந்தியப் படைகள்!

யாழ் உரும்பிராயில் நடைபெற்ற கண்ணிவெடித் தாக்குதல்: முற்றுகைப் பீதியில் இந்தியப் படைகள்!

புடின் கையால் உயரிய விருதொன்றை பெற்ற முதல் இலங்கையர்

புடின் கையால் உயரிய விருதொன்றை பெற்ற முதல் இலங்கையர்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கவுள்ள ஹரீன்!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கவுள்ள ஹரீன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024