மாவீரர் ஒருவரின் இறுதி விருப்பம்! தலைமுறைகள் தழுவிய மாற்றம்

Sri Lankan Tamils Tamils Sri Lankan Peoples
By Dhilak Nov 05, 2025 01:27 PM GMT
Report

1980களின் இறுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரிவொன்றில் கடமையாற்றியிருந்த மேஜர் காந்தரூபன் என்பவர் தொடர்பான நெகிழ்ச்சியான கதையொன்று தற்போது பகிரப்பட்டு வருகிறது.

காந்தரூபன் என்ற இளைஞர், தாய் தந்தையரை இழந்த நிலையில் யோகராஜா தம்பதியினரின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார்.

தாயகம் எதிர்கொண்ட வலி அனைத்தும் அவரை தீவிரமாகப் பாதித்ததன் காரணமாக இளம் வயதிலேயே போராட்டத்தில் ஈடுபட அவர் ஈர்க்கப்பட்டார்.

ஒரு மோதலின் போது, எதிரி படையினருடன் நேரிட்ட போரில் காயமடைந்த காந்தரூபன், இயக்கத்தின் மரபுப்படி உயிரை மாய்க்க முயன்றபோதும், அருகில் இருந்த தோழர்கள் அவரை மீட்டு காப்பாற்றினர்.

உயிர் தப்பினாலும், அருந்திய விஷத்தால் அவரது உடல் மிகுந்த தளர்ச்சி அடைந்தது.

வைத்தியர்கள் வழங்கிய ஆலோசனைப்படி, அவருக்கு சத்துணவு தேவைப்பட்டதால், அதை புரிந்துக் கொண்ட தேசியத் தலைவர், பசு மாடு ஒன்றை வாங்கி அவருக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தார்.

அதன்போது, தலைவரின் துணைவியாரே காந்தரூபனை நேரடியாக கவனித்த நிலையில், சில வாரங்களில் அவர் மீண்டு மீண்டும் பணியில் இணைந்தார்.

எவ்வாறாயினும், காந்தரூபனுக்கு தனது உடல் மீண்டிருந்தாலும், மனதில் ஒரு புதுக் கனவு உருவாகி இருந்தது.

ஒருநாள் தலைவரை நெருங்கிப் பேச கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர், “தமிழீழத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் என்று எவரும் இருக்கக் கூடாது; அவர்களை நமது இயக்கம் அரவணைக்க வேண்டும்” என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அந்த எண்ணம் பின்னர் ஒரு உண்மையான முயற்சியாக மாறியது. 1993 நவம்பர் 1ஆம் திகதி மேஜர் காந்தரூபனின் விருப்பத்தின் படி, காந்தரூபன் அறிவுச்சோலைச் சிறுவர் இல்லம்’ திறக்கப்பட்டது.

அந்த இல்லம், வடமராட்சி முதல் கிழக்குக் கடற்கரை வரை பெற்றோரை இழந்த பல பிள்ளைகளுக்கான புதிய இல்லமாக மாறியது.

இன்று, அந்த இல்லத்தில் வளர்ந்த குழந்தைகள் பலரும் கல்வியாளர்களாகவும், சமூகப் பணியாளர்களாகவும், தாயக முன்னேற்றத்தில் பங்காற்றுபவர்களாகவும் விளங்குகிறார்கள். 

அந்தவகையில், 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த இல்லம் இவ்வருடத்துடன் தனது 32 ஆம் வருட நினைவு நாளை எட்டியுள்ளது.

யாழ் உரும்பிராயில் நடைபெற்ற கண்ணிவெடித் தாக்குதல்: முற்றுகைப் பீதியில் இந்தியப் படைகள்!

யாழ் உரும்பிராயில் நடைபெற்ற கண்ணிவெடித் தாக்குதல்: முற்றுகைப் பீதியில் இந்தியப் படைகள்!

புடின் கையால் உயரிய விருதொன்றை பெற்ற முதல் இலங்கையர்

புடின் கையால் உயரிய விருதொன்றை பெற்ற முதல் இலங்கையர்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கவுள்ள ஹரீன்!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கவுள்ள ஹரீன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026