முதலமைச்சரை நேரடியாக சாடிய விஜய் - கைது செய்யப்பட்ட யூடியூபர் வைத்தியசாலையில்

Vijay Tamil nadu Chennai India World
By Thulsi Oct 01, 2025 01:28 AM GMT
Report

புதிய இணைப்பு

கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியதாக கூறி யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் நேற்று (30.09.2025) அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் முன்பு உடல் பரிசோதனை செய்ய சென்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்

கடந்த 27ஆம் திகதி த.வெ.க வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவர்களில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.


சம்பவம் தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சி...எம்.சார்...பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், கட்சி தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் நான் இருப்பேன்” எனவும் அவரது காணொளியில் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு

கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூர் சம்பவம் குறித்து தனது யூடியூப் சேனலில் அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி வெடிப்பு சம்பவம்: தீவிர தேடுதலில் மீட்க்கப்பட்ட மேலும் பல வெடி குண்டுகள்

கிளிநொச்சி வெடிப்பு சம்பவம்: தீவிர தேடுதலில் மீட்க்கப்பட்ட மேலும் பல வெடி குண்டுகள்

முதலாம் இணைப்பு

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக. பொதுச் செயலாளர் உட்பட 3 பேர் மீது கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கரூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மற்றுமொரு முக்கியஸ்தர் கைது

தமிழக வெற்றிக் கழகத்தின் மற்றுமொரு முக்கியஸ்தர் கைது

குற்றமற்ற கொலைக்கான தண்டனை

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் காவல்துறையினர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் மதியழகன் மீது  கொலைக்கு சமம் ஆகாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை, குற்றமற்ற கொலை முயற்சி, மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதலமைச்சரை நேரடியாக சாடிய விஜய் - கைது செய்யப்பட்ட யூடியூபர் வைத்தியசாலையில் | Karur Stampede Case Filed Against Vijay Tvk Party

நேற்று த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய இரண்டு பேரையும் வழக்கில் சேர்த்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தொடரும் பதற்றம்: தவெக கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் தொடரும் பதற்றம்: தவெக கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சட்டத்தரணிகள் மனு தாக்கல்

கரூரில் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கட்சியின் அங்கீகாரத்தை இரத்து செய்வதோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்துக்கு மதுரை மானகிரியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

முதலமைச்சரை நேரடியாக சாடிய விஜய் - கைது செய்யப்பட்ட யூடியூபர் வைத்தியசாலையில் | Karur Stampede Case Filed Against Vijay Tvk Party

சிவகங்கை மாவட்டம் ஆளவந்தான்பட்டியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவரும் கரூர் துயர சம்பவத்துக்கு காரணமாக நடிகர் விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து எந்தவித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். .

மேலும் இணையவழியினூடாகவும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   

சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு

இதேவேளை கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். 

முதலமைச்சரை நேரடியாக சாடிய விஜய் - கைது செய்யப்பட்ட யூடியூபர் வைத்தியசாலையில் | Karur Stampede Case Filed Against Vijay Tvk Party

இந்நிலையில் முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கினார். 

இந்நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  அதன்படி, இந்த மனு மீது இன்று விசாரணைக்கு ஏற்கப்படவில்லை. 

மேலும், தவெக தாக்கல் செய்த வழக்கில் இடையீடு மனுவாக தாக்கல் செய்தால் தான் விசாரிக்க முடியும் எனவும் உயர்நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது. 

மீண்டும் கரூர் செல்கிறாரா விஜய்..! அவசர அவசரமாக நடந்த தவெக கூட்டம்

மீண்டும் கரூர் செல்கிறாரா விஜய்..! அவசர அவசரமாக நடந்த தவெக கூட்டம்

தவெக பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் தலைமைகள் இரங்கல்!

தவெக பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் தலைமைகள் இரங்கல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பிரான்ஸ், France

09 May, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
4ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany

12 May, 2016
மரண அறிவித்தல்

சுன்னாகம், சிட்னி, Australia

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026