முதலமைச்சரை நேரடியாக சாடிய விஜய் - கைது செய்யப்பட்ட யூடியூபர் வைத்தியசாலையில்

Vijay Tamil nadu Chennai India World
By Thulsi Oct 01, 2025 01:28 AM GMT
Report

புதிய இணைப்பு

கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியதாக கூறி யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் நேற்று (30.09.2025) அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் முன்பு உடல் பரிசோதனை செய்ய சென்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்

கடந்த 27ஆம் திகதி த.வெ.க வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவர்களில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.


சம்பவம் தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சி...எம்.சார்...பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், கட்சி தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் நான் இருப்பேன்” எனவும் அவரது காணொளியில் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு

கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூர் சம்பவம் குறித்து தனது யூடியூப் சேனலில் அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி வெடிப்பு சம்பவம்: தீவிர தேடுதலில் மீட்க்கப்பட்ட மேலும் பல வெடி குண்டுகள்

கிளிநொச்சி வெடிப்பு சம்பவம்: தீவிர தேடுதலில் மீட்க்கப்பட்ட மேலும் பல வெடி குண்டுகள்

முதலாம் இணைப்பு

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக. பொதுச் செயலாளர் உட்பட 3 பேர் மீது கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கரூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மற்றுமொரு முக்கியஸ்தர் கைது

தமிழக வெற்றிக் கழகத்தின் மற்றுமொரு முக்கியஸ்தர் கைது

குற்றமற்ற கொலைக்கான தண்டனை

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் காவல்துறையினர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் மதியழகன் மீது  கொலைக்கு சமம் ஆகாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை, குற்றமற்ற கொலை முயற்சி, மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதலமைச்சரை நேரடியாக சாடிய விஜய் - கைது செய்யப்பட்ட யூடியூபர் வைத்தியசாலையில் | Karur Stampede Case Filed Against Vijay Tvk Party

நேற்று த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய இரண்டு பேரையும் வழக்கில் சேர்த்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தொடரும் பதற்றம்: தவெக கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் தொடரும் பதற்றம்: தவெக கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சட்டத்தரணிகள் மனு தாக்கல்

கரூரில் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கட்சியின் அங்கீகாரத்தை இரத்து செய்வதோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்துக்கு மதுரை மானகிரியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

முதலமைச்சரை நேரடியாக சாடிய விஜய் - கைது செய்யப்பட்ட யூடியூபர் வைத்தியசாலையில் | Karur Stampede Case Filed Against Vijay Tvk Party

சிவகங்கை மாவட்டம் ஆளவந்தான்பட்டியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவரும் கரூர் துயர சம்பவத்துக்கு காரணமாக நடிகர் விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து எந்தவித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். .

மேலும் இணையவழியினூடாகவும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   

சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு

இதேவேளை கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். 

முதலமைச்சரை நேரடியாக சாடிய விஜய் - கைது செய்யப்பட்ட யூடியூபர் வைத்தியசாலையில் | Karur Stampede Case Filed Against Vijay Tvk Party

இந்நிலையில் முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கினார். 

இந்நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  அதன்படி, இந்த மனு மீது இன்று விசாரணைக்கு ஏற்கப்படவில்லை. 

மேலும், தவெக தாக்கல் செய்த வழக்கில் இடையீடு மனுவாக தாக்கல் செய்தால் தான் விசாரிக்க முடியும் எனவும் உயர்நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது. 

மீண்டும் கரூர் செல்கிறாரா விஜய்..! அவசர அவசரமாக நடந்த தவெக கூட்டம்

மீண்டும் கரூர் செல்கிறாரா விஜய்..! அவசர அவசரமாக நடந்த தவெக கூட்டம்

தவெக பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் தலைமைகள் இரங்கல்!

தவெக பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் தலைமைகள் இரங்கல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025