பேராயர் கர்தினால் மற்றும் எல்லே குணவன்ச தேரர் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக மனுத்தாக்கல்!
america
sri Lanka
contract
kerawalapitiya
power station
By Kalaimathy
கெரவலபிட்டிய மின் நிலைய பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 6 ஆம் திகதி கூறப்பட்ட ஒப்பந்தத்தில் அமைச்சரவையில் எட்டப்பட்ட முடிவை இரத்து செய்து, விண்ணப்பம் மீதான விசாரணை முடியும் வரை ஒப்பந்தம் அமுல்படுத்தப்படுவதைத் தடுக்க கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோரே இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி