சிறிலங்கா அரசாங்கத்திற்குள் உக்கிரமடைந்துள்ள நெருக்கடி- பங்காளி கட்சிகளை சந்திக்க மறுக்கும் கோட்டாபய!

mahinda gotabaya kerawalapitiya power cotract
By Kalaimathy Oct 18, 2021 02:25 PM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

கம்பஹா - கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்கும் தீர்மானத்தினால் சிறிலங்கா அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள நெருக்கடி உக்கிரநிலையை அடைந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்துவதற்கு நேரம் ஒதுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திலுள்ள பங்காளிக்கட்சிகள் விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajabaksha)நிராகரித்துள்ளதுடன், இந்த வார இறுதியில் ஆளுங்கட்சி சந்திப்பிற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு நகருக்கு அருகே உள்ள வத்தளை - கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு 10 பங்காளிக் கட்சிகளின் தலவைர்கள் விடுத்த வேண்டுகோளை  கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

அரசியல் மற்றும் அரசின் கொள்கைகள் சம்பந்தப்பட்ட விடயங்களை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajabaksha)மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன்(Basil Rajabaksha) பேசுமாறு கோட்டாபய ராஜபக்ஷ பங்காளிக் கட்சிகளுக்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளார். முன்னதாக, யுகதனவி மின் நிலையத்தின் விற்பனை குறித்து பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு கோரி அரசின் 11 பங்காளிக்கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தன.

அந்தக் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள  கோட்டாபய, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடமும், நிதியமைச்சரிடமும் பேச்சு நடத்தவேண்டுமென குறிப்பிட்டுள்ளார். யுகதனவி மின் நிலையத்தின் 40 வீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டமை குறித்து அரசின் பங்காளிக்கட்சிகள் செப்டெம்பர் 23 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியிருந்தன.

அந்த சந்திப்பில் திருப்திகரமாக இல்லை என்பதால் ஜனாதிபதியை சந்தித்துப் பேச பங்காளி கட்சிகள் தீர்மானித்திருந்த நிலையில், ஜனாதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.. இதேவேளை, அரசாங்கத்திற்குள் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சு நடத்தும் வகையில் ஆளுங்கட்சியிலுள்ள தலைவர்களுடன் இவ்வார இறுதியில் சந்திப்பொன்றிற்கும் கோட்டாபய ராஜபக்ஷ அழைத்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026