சிறுவன் கடத்தல் - இவரைத் தெரியுமா- பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
வடமத்திய மாகாணத்தில், கெடடிவுல, கிராலோகமவில் ஒன்பது வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை எப்பாவல காவல்துறையினர் தேடி வருவதுடன் அவர் தொடர்பில் பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.
சம்பவத்தில் ஒன்பது வயதுடைய P. K. Deneth Premasundara, என்ற சிறுவனே கடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடத்தல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்
கடத்தல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக 45 வயதுடைய மின்சாரப் பணியாளராக கடமையாற்றியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட சிறுவன்
திங்கட்கிழமை இரவு 08.30 மணியளவில் சிறுவன் காணாமல் போயுள்ளதாக தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் எப்பாவல காவல் நிலையத்தை 025-224-9122 அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்