பளையில் இடம்பெற்ற பாரிய விபத்து- ஆபத்தான நிலையில் இருவர்!
பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்டதாலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோதி தள்ளியது.
குறித்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.