கிளிநொச்சியில் மீளச் செயற்படவுள்ள இறால் பண்ணைகள்!
kilinochchi
douglas devanantha
shrimp farm
By Kalaimathy
கிளிநொச்சியில் கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் நிதிப் பங்களிப்புடன் மீளச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி - பரமன்கிராய் பிரதேசத்தில் அரச சார்பற்ற நிறுவனமொன்றால் உருவாக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த இறால் பண்ணைகளை தனியார் முதலீட்டாளர்களின் நிதிப் பங்களிப்புடன் மீளச் செயற்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கமைய, இந்த இறால் பண்ணைகளை ஆரம்பிப்பதற்கான வேலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் சம்பிரதாயபூர்வமாக இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி