கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு விவகாரம் : மேலும் இருவர் அதிரடி கைது
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (13) ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இந்தக் குற்றத்தைச் செய்ய துப்பாக்கிதாரி வந்த காரின் சாரதியாக இருந்தவர் என்றும், சந்தேகநபரான பெண், இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேகநபர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கியவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபருக்கு 27 வயது எனவும், அவர் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபரான பெண்ணுக்கு 32 வயது எனவும், அவர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது, கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்யப்பட்டவர்களைத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 7ஆம் திகதி கொட்டாஞ்சேனை காவல்துறை பிரிவின் 16ஆம் ஒழுங்கைப் பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர் குற்றக் கும்பல் உறுப்பினரான 'பூகுடு கண்ணா' என்ற பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவரின் உதவியாளர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |