தரம் 06 மாணவிகளை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் தலைமறைவு

Kurunegala Child Abuse
By Sumithiran Feb 25, 2024 11:17 PM GMT
Report

குருநாகல் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் ஆறாம் தரம் மாணவிகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆசிரியரினால் மாணவிகள் குழு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமை சரியென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துமாறு பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து வந்த முறைப்பாட்டை அடுத்து குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ஆர். ரத்நாயக்கவின் கோரிக்கைக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் குருநாகல் மாவட்ட அலுவலகம் இந்த விசாரணைகளை மேற்கொண்டது.

சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்  விசாரணை

இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என குருநாகல் மாவட்ட செயலாளரிடம் பெற்றோர்கள் குழு முறைப்பாடு செய்திருந்தது.

தரம் 06 மாணவிகளை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் தலைமறைவு | Kurunegala Children Abused By Teacher

அதன்படி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் குருநாகல் மாவட்ட உளவியல் உத்தியோகத்தர் காஞ்சனா சுபசிங்க, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான சமிர ராமநாயக்க மற்றும் லக்மினி தர்மதாச ஆகியோர் இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

இலங்கையின் 75 வருடகால சாபத்திற்கு யார் காரணம்..!

இலங்கையின் 75 வருடகால சாபத்திற்கு யார் காரணம்..!

பள்ளி நேரங்களில் பல சந்தர்ப்பங்களில் வன்புணர்வு

வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுபவர்கள் , அவர்களின் பெற்றோர்கள், பாடசாலையின் அதிபர் மற்றும் வடமேற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி முதிதா ஜயதிலக ஆகியோரிடமும் விசாரணைக் குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

தரம் 06 மாணவிகளை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் தலைமறைவு | Kurunegala Children Abused By Teacher

விசாரணை அறிக்கையின்படி, சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் நான்கு மாணவிகளை பள்ளி நேரங்களில் பல சந்தர்ப்பங்களில் வன்புணர்வு செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

இந்த ஆசிரியர் தான் பணிபுரியும் பாடசாலையில் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அவர் இருந்த இடம் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னறிவிப்பின்றி வருகை தராமையினால் சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த ஆசிரியர் தொடர்பான அறிக்கையை பாடசாலை அதிபர் குருநாகல் பிராந்திய கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்